Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளத்தில் மலர்ந்த தாமரைக்கே அலறுகிறீர்களே.. ஒவ்வொரு வீட்டிலும் மலரும்! - சேகர்பாபுவுக்கு தமிழிசை பதிலடி!

Prasanth Karthick
வியாழன், 7 நவம்பர் 2024 (09:48 IST)

சமீபத்தில் ‘குளத்தில் கூட தாமரை மலரக்கூடாது’ என அமைச்சர் சேகர்பாபு கிண்டலாக பேசியதற்கு தமிழிசை சௌந்தர்ராஜன் பதில் அளித்து பேசியுள்ளார்.

 

 

சென்னை போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் ஈரநிலை பசுமை பூங்கா பணிகளை ஆய்வு செய்ய அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் சென்றிருந்தார். அங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட அவர் அங்கிருந்த குளத்தில் தாமரை மலர்கள் மலர்ந்திருப்பதை சுட்டிக்காட்டி, குளத்தில் கூட தாமரை மலரக்கூடாது, அதை அகற்றுங்கள் என கிண்டலாக பேசியுள்ளார்.

 

அமைச்சர் சேகர்பாபு கிண்டலாக பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அவரது பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியுள்ளார்.
 

ALSO READ: டிரம்பின் முதல் கையெழுத்து இதுதான்.. 10 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பா?
 

அதில் அவர் “குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே.. வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரப் போகிறது. அதை கண்டு அலறப்போகிறீர்கள். அரசு பூங்காவில் கூட தாமரை இருக்க கூடாது என நினைக்கும் நீங்கள், தாமரையே அரசமைப்பதை காண்பீர்கள்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments