Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னந்தனியாக பேருந்தை நிறுத்திய திமுக பெண் தொண்டருக்கு ஸ்டாலின் அழைப்பு

Webdunia
வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (12:25 IST)
நேற்று திமுக உள்பட 15 எதிர்க்கட்சிகள் நடத்திய பந்த் மற்றும் சாலை மறியல் போராட்டத்தால் தமிழகமே ஸ்தம்பித்தது. குறிப்பாக திமுக தொண்டர்கள் தமிழகமெங்கும் முழக்கமிட்ட கோஷங்களால் தமிழக காவல்துறை திணறியது

இந்த நிலையில் நேற்று வேலூர் - திருப்பத்தூர் சாலையில் அரசு பேருந்து ஒன்றை தன்னந்தனியாக திமுக கொடியை கையில் ஏந்திய ஒரு பெண் வழிமறித்து தனது எதிர்ப்பை காட்டினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. தனியொரு பெண்ணாக பேருந்தை வழிமறித்த அந்த பெண் திமுக தொண்டருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது

இந்த நிலையில் தன்னந்த்தனியாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் பெயர் தெய்வநாயகி என்று தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் அழைப்பின் பேரில் இன்று அவர் அண்ணா அறிவாலயம் வருகை தந்து ஸ்டாலினை சந்தித்து ஆசிபெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments