Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லா நற்பணிகளும் ஆன்மிகத்தின் துணையுடனே வெற்றி பெற்றுள்ளது: இராம.கோபாலன்

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2015 (01:58 IST)
நமது பாரதத்தில் எல்லா நற்பணிகளும் ஆன்மிகத்தின் துணையுடனே வெற்றி பெற்றுள்ளது என்று இந்து முன்னணி கருத்து தெரிவித்துள்ளது.
 

 
இது குறித்து, இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 
பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்திற்கும், கங்கை தூய்மைத் திட்டத்திற்கும் மாதா அமிர்தானந்தமயி சுமார் 100 கோடி ரூபாயை வழங்கி உள்ளார். அவரது இந்த தே பக்தி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் உள்ளத்திலும் எதிரொலிக்கும்.
 
அன்பு உள்ளம் கொண்ட அம்மா இதில் முன் உதாரணமாக விளங்கி வழிகாட்டி உள்ளார். இவரைப் போலவே, அனைத்து ஆன்மிக அமைப்புகளும் நல்ல திட்டங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்.
 
கந்தையானாலும் கசக்கிக்கட்டு, சுத்தம் சோறு போடும் போன்ற பழமொழிகள் மூலம் தூய்மையை இளம் வயதிலேயே மனதில் பதிய வைத்தனர் நமது முன்னோர்கள்.
 
எனவே, நமது பாரதத்தில் எல்லாம் நற்பணிகளும் ஆன்மிகத்தின் துணையுடனே வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார். 
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments