Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கா? அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (07:35 IST)
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ள நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த வாரம் வரை தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் சென்னையில் இருந்து மக்கள் வேறு மாவட்டங்களுக்கு புலம்பெயர ஆரம்பித்த நிலையில் இப்போது எல்லா மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக ஆரம்பித்துள்ளது.

இதனால் மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தகவல்கள் பரவி வருகின்றன. இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் காலை 10 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments