Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரை ஆட்சி அமைக்க அழைப்பது? ஆளுநர் ஆலோசனை

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2017 (15:13 IST)
தமிழக பொறுப்பு ஆளுநர் சென்னைக்கு புறப்படும் முன், யாரை ஆட்சி அமைக்க அழைப்பது? என்பது குறித்து சட்ட நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 


இன்னும் சற்று நேரத்தில் சென்னை வரவுள்ள ஆளுநர் விதயாசாகர் ராவ், சென்னை புறப்படும் முன் டெல்லியில், யாரை ஆட்சி அமைக்க அழைப்பது? என்பது குறித்து சட்ட நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ராஜினாமா மிரட்டி நிர்பந்தம் செய்ததால் நடந்தது என்றும், அதிமுக கட்சியில் ஒரு அசாதாரண சூழல் நிலவுவதாகவும் கூறினார். இதையடுத்து அவருக்கு சட்டப்படி என்ன வாய்ப்பு அளிப்பது என்பது குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் அவரது பெரும்பான்மையை  நிரூபிக்க வாய்ப்பு வழங்க முடியுமா என்றும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தற்போது பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments