Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேசிக்கிட்டே வாகனம் ஓட்டுவோருக்கு இனி இந்த கதி தான்..?

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (16:27 IST)
பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவரின் செல்போனை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை  கிளை கேள்வியெழுப்பியுள்ளது. 


 
கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்  பொதுநலன் சார்ந்த  மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுபவர்களுக்கு ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும்,  வாகன விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கான அபராதத்தை 10,000 ரூபாயிலிருந்து 1 லட்சமாக உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
 
சமூக அக்கறை கொண்ட இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது , செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பதை விட அவர்களின் செல்போனை பறிமுதல் செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது என நீதிமன்றம் தடாலடியாக கேள்வி எழுப்பியது. 
 
இதனை கேட்டு சற்று நிமிடம் சிந்தித்து பின்னர் இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments