Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”என்ன நடந்தாலும் சட்டமன்றத்தில் பேசாமல் வெளியே வரமாட்டோம்” - ஸ்டாலின் சபதம்

Webdunia
திங்கள், 18 ஜூலை 2016 (00:09 IST)
என்ன நடந்தாலும் எந்தப்பிரச்சனையானாலும் சட்டமன்றத்தில் பேசாமல் வெளியே வரமாட்டோம் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

 
சேலத்தில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மக்கள் திமுகவை, திமுகவில் இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
விழாவில் கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், ‘’13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சாதனை படைத்த தலைவர் கலைஞர். சாதனைத் தலைவர் தலைமையிலான திமுகவில் இணைந்துள்ள மக்கள் தேதிமுகவினரை வரவேற்கிறேன்.
 
திமுக ஆட்சிக்கு வரவில்லையே என நம்மைவிட வேதனைப்படுபவர்கள் பொதுமக்கள்தான். என்ன நடந்தாலும் எந்தப்பிரச்சனையானாலும் சட்டமன்றத்தில் பேசாமால் வெளியே வரமாட்டோம். தற்போது தமிழக சட்டமன்றத்தில் ஒரே எதிர்க்கட்சியாக திமுக இடம் பெற்றுள்ளது.  
 
நூற்றாண்டு கொண்ட திராவிட இயக்கம் மேலும் பல நூற்றாண்டு இருந்தாக வேண்டும். திமுகவை தொடங்கிய அண்ணா விட்டுச்சென்ற பணிகளை கலைஞர் நிறைவேற்றி வருகிறார். 67 ஆண்டு காலமாக திமுக தமிழர்களுக்காக தனது கடமையை நிறைவேற்றி வருகிறது” என்று பேசினார்.

சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோவில் அர்ச்சகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்.. என்ன காரணம்?

தனுஷ்கோடிக்கு செல்ல தடை.. ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்

2024–25-ம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ-யில் தமிழ் பாட தேர்வு கட்டாயம்: பள்ளி கல்வித்துறை தகவல்

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

அந்த பத்து பேருக்கு.. பங்கம் செய்தார் அண்ணாமலை.. நடிகை கஸ்தூரி ட்விட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments