Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவை முன்மொழிய ஓ.பி.எஸ்-க்கு என்ன உரிமை இருக்கிறது: சீறும் ஆனந்தராஜ்

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (00:46 IST)
சசிகலாவை முன்மொழிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன உரிமை இருக்கிறது. மக்களுக்குத்தான் அந்த உரிமை இருக்கிறது என்று நடிகர் ஆனந்த்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆனந்தராஜ், ‘’சட்டமன்றக்குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதில் ஏன் இத்தனை அவசரம் என்று தெரியவில்லை. நடக்கின்ற ஆட்சியே நன்றாகத்தானே ஜனநாயக முறைப்படி போய்க்கொண்டிருந்தது.
 
தெருத்தெருவாக சென்று வெயிலில் அலைந்து வாக்குசேகரித்தவன் நான். அதனால், எனக்கு இது குறித்து பேச உரிமை இருக்கிறது.  முதலமைச்சர் என்கிற பொறுப்பு மக்கள் தருகிற பொறுப்பு. தயவுகூர்ந்து அவசரம் காட்டாமல் சிந்தித்து செயல்பட வேண்டும்.
 
சசிகலாவை முன்மொழிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன உரிமை இருக்கிறது. மக்களுக்குத்தான் அந்த உரிமை இருக்கிறது. அவர் வாக்களித்த மக்களை கேட்டிருக்க வேண்டும். மறு தேர்தல் வந்து மக்கள் தேர்ந்தெடுத்தால் என் முதல்வரும் அவர்தான்’’ என்று தெரிவித்தார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments