Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எனது மகனின் கதி என்ன? - புலம்பும் மதனின் தாயார்

எனது மகனின் கதி என்ன? - புலம்பும் மதனின் தாயார்
, வெள்ளி, 3 ஜூன் 2016 (18:31 IST)
எனது மகனின் கதி என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளோம் என்று வேந்தர் மூவிஸ் நிறுவனர் மதனின் தாயார் தங்கம் கூறியுள்ளார்.
 

 
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், தனது மகனுக்கு மருத்துவ சீட் வாங்கித் தருவதாகக் கூறி வேந்தர் மூவிஸ் நிறுவனர் மதன் 52 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளித்திருந்தார்.
 
இதனையடுத்து மதன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயமானார். அவர் எழுதியுள்ளதாக கடிதம் வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மதன் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் தலைவர் பாரிவேந்தர் எனப்படும் டி.ஆர்.பச்சமுத்துக்கு நெருக்கமாக இருந்தவர். 
 
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதன் தாயார் தங்கம், ”எனது மகனின் கதி என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளோம். முதல் அமைச்சரின் தனிப் பிரிவில் மனு அளித்துள்ளோம்.
 
மதன் கிடைக்க ஊடங்கள் உதவி செய்ய வேண்டும். எனது மகன் எழுதிய கடிதத்தில் யாருக்கும் மிரட்டல் விடுக்கவில்லை. பாரிவேந்தர், ரவி, மதன் ஆகியோரிடையே எழுந்த பணிப் பூசல் காரணமாக மதன் மாயமாகியிருக்கலாம்.
 
எஸ்.ஆர்.எம். கல்வி குழும நிறுவனர் பாரிவேந்தர் எங்களை சந்திக்க மறுத்துவிட்டார். எனது மகன் எந்த தவறும் செய்யவில்லை. இந்த ஆண்டு மாணவர்கள் தந்த பணம் எஸ்.ஆர்.எம். நிறுவனத்திடம் தான் உள்ளது என்று மதன் கூறியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிலை பதுக்கல் விவகாரத்தில் தீனதயாளன் பாஸ்போர்ட் முடக்கம்