Webdunia - Bharat's app for daily news and videos

Install App

21 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கிறிஸ்துமஸ் தினத்தில் மழை: தமிழ்நாடு வெதர்மேன்

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (15:57 IST)
சென்னையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்மஸ் தினத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்
 
 வரும் டிசம்பர் 25ஆம் தேதி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூலில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 20 ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்துமஸ் தினத்தில் மழை பெய்தது என்றும், அதனை அடுத்து தற்போது தான் மழை பெய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
2001ஆம் ஆண்டில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தில் மழை பெய்தது என்றும் 20 ஆண்டுகள் கழித்து தற்போது தான் கிறிஸ்துமஸ் தினத்தில் மழை பெய்ய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments