Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்னிப்பு கேட்காவிட்டால் எஸ்.வி.சேகரை கைது செய்வோம்: உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (13:30 IST)
நடிகர் மற்றும் பாஜக பிரமுகர் எஸ்வி சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் தேசியக் கொடியை குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். காவி என்றால் மோசமான நிறமா? தேசியக் கொடியிலுள்ள காவி நிறத்தை கட் செய்துவிட்டு முதல்வர் தேசியக் கொடியை ஏற்றுவாரா? என்று கூறியிருந்தார்
 
இந்த வீடியோவுக்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது சமீபத்தில் எஸ்வி சேகர் நேரில் ஆஜர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்றும் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ’தேசிய கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் எஸ்வி சேகர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரை கைது செய்வோம் என்று உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்
 
செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் எஸ்வி சேகர் அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மன்னிப்பு கேட்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments