Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது: சித்தராமையா

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2017 (21:29 IST)
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


 


 
காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பான இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, வினாடிக்கு 2000 கன அடி நீர் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
 
கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடாமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பியது. மேலும் இந்த வழக்கை வரும் ஜூலை மாதம் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட முடியாது என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
எங்கள் மாநிலத்தின் பயன்பாட்டிற்கே தண்ணீர் பற்றாக்குறையாக உள்ள நிலையில் தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் திறந்துவிட முடியும் என தெரிவித்துள்ளார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments