Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை.. கடும் நடவடிக்கை என அறிவிப்பு

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (14:20 IST)
டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்கு பதிலாக வேறு நபர்களை பணி புரிய வைத்து விட்டு வெளியே சென்று விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் ஆய்வின்போது டாஸ்மாக் பணியாளர்கள் இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
ஆய்வின்போது ஊழியர்கள் கடைகளில் இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பணியாளர்கள் பதிலாக வேறு நபர்கள் பணியாற்றுவதாக வந்த புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
 மேலும் டாஸ்மாக் தலைமை அலுவலகம் அல்லது வங்கிகளுக்கு செல்லும் போது உரிய அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார் 
 
ஊழியர்கள் தங்களுக்கு பதிலாக போலியான ஒரு நபரை வைத்து விட்டு வெளியே சென்று கொள்வதாக கூறப்படும் புகாருக்கு டாஸ்மாக் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments