Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் புகை பிடிக்கவோ, மது குடிக்கவோ கூடாது: சரத்குமார்

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (08:59 IST)
சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் யாரும் புகை பிடிக்கவோ, மது குடிக்கவோ கூடாது என்று சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
விருதுநகரில் 14 ஏக்கர் பரப்பளவில் காமராஜருக்கு மணி மண்டபம் கட்டும் பணி நடந்து வருகிறது.

இதற்கான ஏற்பாடுகளை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்து வருகிறார்.
 
இந்த மணிமண்டபத்திற்காக நிதி வழங்கும் விழா திருப்பூர் தெற்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நடைபெற்றது. இந்தி விழாவில் சரத்குமார் கலந்து கொண்டு பேசினார்.
 
அப்போது சரத்குமார் கூறுகையில், "சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் யாரும் புகை பிடிக்கவோ, மது குடிக்கவோ கூடாது. இளைஞர்களுக்கு நாம் முன் உதாரணமாக இருக்க வேண்டும்.
 
டாஸ்மாக் கடையைப் பூட்டுவதற்கு போராட்டம் நடத்துவதை விட்டுவிட்டு, டாஸ்மாக் கடையில் மதுவை வாங்காமல் புறக்கணித்தால் அந்த கடை தானாக மூடப்படும்.
 
எனவே உங்கள் கிராமத்தில் இதற்கு ஊர்க்கட்டுப்பாடு விதிக்க ஏற்பாடு செய்யுங்கள். என்று சரத்குமார் கூறினார்.

கள்ளக்காதலை கணவர் ஏற்கவில்லை.. மனவிரக்தியில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் தற்கொலை..!

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பதினான்கு பேர், தங்கம் மற்றும் வெள்ளி,பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

சிறிய அளவு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை: தவறி கீழே விழுந்த குடையால் பரபரப்பு..!

நான் மனிதன் அல்ல! பரமாத்மாவால் பூமிக்கு அனுப்பப்பட்டேன்! – பிரதமர் மோடி!

Show comments