Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: இருவர் பலி!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (10:15 IST)
விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
விருதுநகர் மாவட்டத்தில் அவ்வப்போது பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அனுமதி பெறாத பட்டாசு ஆலைகளில் தான் அதிகமான அளவு விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி என்ற பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் 5 தொழிலாளர்கள் சிக்கி உள்ளதாகவும் அவர்களை மீட்க தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு படையினர் முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மீட்பு பணியில் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments