Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகர் சிலை நீரில் கரைப்பு: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை

Webdunia
புதன், 27 ஆகஸ்ட் 2014 (10:40 IST)
ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கக் கூடாது என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

“களிமண்ணால் செய்யப்பட்டதும், எந்தவித ரசாயனக் கலவையற்ற கிழங்கு மாவு, மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் சிலைகள், ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் நீரில் கரைக்க அனுமதிக்கப்படும்.

ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் விதிமுறைகளின்படி நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்“ என்று அவர் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அவை கடலில் கரைக்கப்படுவது வழக்கம்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments