Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேச்சுவார்த்தை தோல்வி: விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைப்பு..!

Webdunia
புதன், 7 ஜூன் 2023 (07:53 IST)
பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து விழுப்புரம் அருகே மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியல் இன மக்களை அனுமதிப்பது குறித்த சர்ச்சை எழுந்தது. இதனை அடுத்து அந்த பகுதி மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. 
 
இதுவரை நடைபெற்ற ஏழு சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் எந்தவித தீர்வும் காணப்படவில்லை. இதனையடுத்து விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இன்று காலை கோவிலுக்குள் சீல் வைத்தார். மேலும் மேல்பாதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
பட்டியலில் இன மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் மேல்பாதி அம்மன் கோயில் சீல் வைக்கப்பட்டதால் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments