Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி விலை அதிகரிப்பு எதிரொலி: பவுடராக்கி விற்பனை செய்ய முடிவு..! வணிகர் சங்க தலைவர் தகவல்

Webdunia
சனி, 15 ஜூலை 2023 (11:31 IST)
தக்காளி விலை அதிகரித்து வரும் நிலையில் தக்காளி விலை குறைவாக இருக்கும் போது அதனை பவுடர் ஆக்கி, விலை அதிகமாக இருக்கும் போது விற்பனை செய்யலாம் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.
 
 தக்காளியை பவுடர் ஆக்கி விற்பனை செய்ய அரசு முன் வந்தால் அதனை விற்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தக்காளி விலை குறைவாக இருக்கும்போது அவற்றை அரசு கொள்முதல் செய்து பவுடர் ஆக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தக்காளி விலை அதிகமாக இருக்கும்போது அதனை குறைந்த விலையில் விற்பனை செய்தால் தக்காளி விலையை கட்டுப்படுத்தி விடலாம் என்றும் இதனை விற்பனை செய்ய வணிகர்கள் தயாராக இருப்பதாகவும் அதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் விக்ரம் ராஜா தெரிவித்துள்ளார் 
 
மேலும் வேளாண் பொருட்களுக்கு சுங்கவரி ரத்து செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் தக்காளி உள்ளிட்ட காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தில் ஜூன் 19 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பாஜக தோல்விக்கு மாநில தலைவர் தான் காரணம்.. அரைநிர்வாண போராட்டம் நடத்தியவர் டிஸ்மிஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments