Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கவில்லை - சர்ச்சையில் சிக்கிய காஞ்சி விஜயேந்திரர்

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (11:35 IST)
சென்னையில் நடந்த ஒரு விழாவில் தமிழ்தாய் வாழ்த்து பாடிய போது, காஞ்சி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் உட்கார்ந்திருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ் - சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், ஆளுநர் பன்வாரிலால் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். விழாவின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது, ஆளுநர் உட்பட அனைவரும் எழுந்து நின்றனர். ஆனால், இந்த விழாவில் கலந்து கொண்ட காஞ்சி இளைய மடாதிபதி விஜேயேந்திர சரஸ்வதி மட்டும் எழுந்து நிற்காமல் தனது இருக்கையிலேயே அமர்ந்திருந்தார்.

ஆனால், விழா முடிந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார். விஜயேந்திரரின் இந்த செயல் அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இதன் மூலம் அவர் தமிழை அவமரியாதை செய்து விட்டார் எனவும், இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ஆண்டாள் விவகாரத்தை கையில் எடுத்து வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என போர்க்கொடி பிடித்த ஹெச்.ராஜா மற்றும் இந்து அமைப்பினர் விஜேந்திரரை மன்னிப்பு கேட்ப சொல்வார்களா? எனவும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments