Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்த் தலைமையில் புதிய அணி? திருமாவளவனை சேர்க்க முயற்சி?: கண்ணாமூச்சி ரே..ரே..

Webdunia
புதன், 9 மார்ச் 2016 (12:21 IST)
விஜயகாந்த் தலைமையில் ஒரு அணியை உருவாக்க பாஜக முயற்சி செய்து வருவதாகவும், அந்த அணியில் ஒரு சில கட்சிகளை இணைக்கவும் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


 

 
விஜயகாந் தலைமையில், இந்த கூட்டணி அமையவுள்ளதாகவும், இது குறித்து மக்கள் நலக்கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அதனை மக்கள் நலக் கூட்டணி ஏற்காததால், மக்கள் நல கூட்டணியில் இடம் பெற்றுள்ள திருமாவளவனை அந்த கூட்டணியில் இருந்து இழுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
 
அந்த புதிய கூட்டணியில், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாஜக மற்றும் சில சிறிய கட்சிகளை ஒருங்கிணைக்க முயற் சியும் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்நிலையில், திருமாவளவன் பஜகவுடன் கூட்டணி சேர தயக்கம் காட்டி வருவதாகவும், பாஜகவுடன் சேரமாமல் மக்கள் நலக்கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்தை திருமாவளவன் கோரின்கை விடுத்ததாகவும் கூறப்படுகின்றது.


 

 
எனவே, விஜயகாந்த் கூட்டணி குறித்த தனது அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டால்தான்  இத்தகு குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்.
 
திமுக-தேமுதிக வுடனான் கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதாக கடந்த சில நாட்களாக செய்திகள் தொடர்ந்து வெளிகி வருவது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Show comments