Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் யோகா செய்யும் கேப்டன்

Webdunia
திங்கள், 9 நவம்பர் 2015 (04:05 IST)
கோவை அருகே உள்ள ஈஷா யோகா மையத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிறப்பு யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 
தேமுதிக தலைவர் விஜயகாந்த்-கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லை என கூறப்படுகிறது. இதற்காக அவர் டாக்டர்கள் சிலரை சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை விஜயகாந்த் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
 
இந்த நிலையில், கோவை அருகே அருகே உள்ள வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில், தேமுதிக தலைவர் விஜகாந்த் மகனும், நடிகருமான சண்முக பாண்டியன் யோகா பயிற்சி பெற்றுவருவதாக கூறப்படுகிறது.
 
ஈஷா யோகா மையத்தில் பயிற்சி பெற்ற தனது மகனை காண வந்த விஜயகாந்த், சனிக்கிழமை அன்று சென்று பார்த்து சந்தித்து பேசியுள்ளார். இதனையடுத்து, அவரும் சிறப்பு யோகா பயிற்சியல் விரும்பி சேர்ந்து பயிற்சி பெறுவதாக கூறப்படுகிறது. அங்கு அவர் ஒரு வார காலம் பயிற்சியில் ஈடுபடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆனால், இந்த தகவலை ஈஷா யோகா மையமோ அல்லது தேமுதிக தலைவர் விஜயகாந்த் தரப்போ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments