Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளங்கோவனை தலைவர் பதவியில் இருந்து நீக்க கோரி சோனியாவுக்கு விஜயதாரணி கடிதம்

Webdunia
சனி, 28 நவம்பர் 2015 (15:01 IST)
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கக் கோரி சோனியா காந்திக்கு விஜயதாரணி கடிதம் எழுதியுள்ளார்.
 

 
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் இளங்கோவனை மாற்றக் கோரி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், குமரி அனந்தன், வசந்தகுமார், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட பலரும் கங்கிரஸ் கட்சிதலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினர்.
 
இந்நிலையில், சமீபத்தில் சத்தியமூர்த்தி பவனில், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் மாநில தலைவர் இளங்கோவன் படத்துடன் விஜயதாரணி படம் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தது.
 
இதனையடுத்து, அந்த பேனரில் இருந்த விஜய தாரணியின் படம் கிழிக்கப்பட்டது. பேனரையும் அவிழ்த்து விட்டனர். இதனால் விஜயதாரணியின் ஆதரவாளர்கள் கோபம் அடைந்தனர்.
 
இதற்கிடையில், இது குறித்து விஜயதாரணி பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளங்கோவனிடம் முறையிட்டுள்ளார். விஜயதாரணியை இளங்கோவன் சமாதானப்படுத்தி இருக்கிறார்.
 
ஆனாலும் விஜயதாரணி இளங்கோவனிடம் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், பொறுமையிழந்த இளங்கோவன் அங்கிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார்.
 
இந்நிலையில், விஜயதாரணி, இளங்கோவன் பெண் நிர்வாகிகளை மதிப்பதில்லை என்றும் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

Show comments