Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”கத்தியின்றி, ரத்தமின்றி, கருத்தடை செய்துகொள்ள வாருங்கள்” ஆண்களுக்கு கோரிக்கை விடுக்கும் விஜயபாஸ்கர்

Arun Prasath
புதன், 19 பிப்ரவரி 2020 (12:36 IST)
கருத்தடை சிகிச்சை செய்துக்கொள்ள ஆண்களும் முன்வரவேண்டும் என சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், ஆண்கள் கருத்தடை சிகிச்சை செய்ய ஊக்குவிப்பதில் அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ”ஆண்டுக்கு இரண்டு லட்சம் பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என கூறியுள்ளார்.

மேலும், “ஆண்களுக்கு கத்தியின்றி, ரத்தமின்றி, எவ்வித தழும்புமின்றி கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டு 80 பேருக்கும், 2019 ஆம் ஆண்டுக்கு 800 பேருக்கும் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments