Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபசுரக்குடிநீரோடு களம் இறங்கிய விஜய் சேதுபதி ரசிகர்கள்! – மக்கள் ஆதரவு

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (13:05 IST)
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் விஜய் சேதுபதி ரசிகர்கள் கபசுரக்குடிநீரை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனாவிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலில் ஒரு சில மருந்துகள் மட்டும் ஓரளவு பாதிப்பிலிருந்து மீள உதவுவதாக மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் நிலவேம்பு கசாயம், கபசுரக்குடிநீர் உள்ளிட்டவற்றை பருகி வருகின்றனர். சில தன்னார்வலர்கள் இந்த கபசுரக்குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தாம்பரம் மற்றும் சிட்லபாக்கம் பகுதியில் உள்ள விஜய் சேதுபதி ரசிகர்கள் சாலைகளில் சுத்தம் செய்யும் பணியில் உள்ள சுகாதார பணியாளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கியுள்ளனர். இளைஞர்களின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments