Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபசுரக்குடிநீரோடு களம் இறங்கிய விஜய் சேதுபதி ரசிகர்கள்! – மக்கள் ஆதரவு

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (13:05 IST)
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் விஜய் சேதுபதி ரசிகர்கள் கபசுரக்குடிநீரை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனாவிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலில் ஒரு சில மருந்துகள் மட்டும் ஓரளவு பாதிப்பிலிருந்து மீள உதவுவதாக மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் நிலவேம்பு கசாயம், கபசுரக்குடிநீர் உள்ளிட்டவற்றை பருகி வருகின்றனர். சில தன்னார்வலர்கள் இந்த கபசுரக்குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தாம்பரம் மற்றும் சிட்லபாக்கம் பகுதியில் உள்ள விஜய் சேதுபதி ரசிகர்கள் சாலைகளில் சுத்தம் செய்யும் பணியில் உள்ள சுகாதார பணியாளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கியுள்ளனர். இளைஞர்களின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments