Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டியூஷன் எடுக்க சொன்னா...? நித்யாவின் உல்லாச வீடியோவை பார்த்து கணவர் ஷாக்

Webdunia
வியாழன், 21 மார்ச் 2019 (18:41 IST)
திருவண்ணாமலையை அடுத்த ஆரணியில் மனைவி மாணவர்களுடன் உல்லாசமாக இருப்பதாக கணவர் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ் குமார். இவர் அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி நித்யாவும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 
 
நித்யா அந்த பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்தும் வந்தார். இந்நிலையில் அப்போது நித்யாவுக்கு ஒரு மாணவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு உல்லாசமாக இருந்துள்ளனர். இதனையடுத்து அவர் செங்கம் அரசு பள்ளிக்கு பணி மாறுதல் பெற்ற பிறகும் அங்கும் மாணவர்களுடன் உல்லாசத்தில் ஈட்டுப்பட்டுள்ளார். 
 
இப்படி மாணவர்களுடன் உல்லாசமாக இருந்ததை புகைப்படமாகவும், வீடியோக்களாகவும் எடுத்துவைத்திருந்த நித்யா. அதனை அவ்வப்போது பார்த்து வந்தார். ஒருமுறை இதனை அவரது கணவர் பார்த்துவிட்டார். இதன் பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். 
 
ஆனால், மன உலைச்சலுக்கு உள்ளான உமேஷ் குமார் நித்யாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை திரட்டி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து நித்யா போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

தொடர்புடைய செய்திகள்

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments