டியூஷன் எடுக்க சொன்னா...? நித்யாவின் உல்லாச வீடியோவை பார்த்து கணவர் ஷாக்

Webdunia
வியாழன், 21 மார்ச் 2019 (18:41 IST)
திருவண்ணாமலையை அடுத்த ஆரணியில் மனைவி மாணவர்களுடன் உல்லாசமாக இருப்பதாக கணவர் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ் குமார். இவர் அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி நித்யாவும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 
 
நித்யா அந்த பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்தும் வந்தார். இந்நிலையில் அப்போது நித்யாவுக்கு ஒரு மாணவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு உல்லாசமாக இருந்துள்ளனர். இதனையடுத்து அவர் செங்கம் அரசு பள்ளிக்கு பணி மாறுதல் பெற்ற பிறகும் அங்கும் மாணவர்களுடன் உல்லாசத்தில் ஈட்டுப்பட்டுள்ளார். 
 
இப்படி மாணவர்களுடன் உல்லாசமாக இருந்ததை புகைப்படமாகவும், வீடியோக்களாகவும் எடுத்துவைத்திருந்த நித்யா. அதனை அவ்வப்போது பார்த்து வந்தார். ஒருமுறை இதனை அவரது கணவர் பார்த்துவிட்டார். இதன் பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். 
 
ஆனால், மன உலைச்சலுக்கு உள்ளான உமேஷ் குமார் நித்யாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை திரட்டி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து நித்யா போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments