Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிந்து கிடக்கும் அதிமுகவின் சக்திகள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி கிடைக்கும்..! ஓபிஎஸ்

Senthil Velan
ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (15:18 IST)
பிரிந்து கிடக்கும் அதிமுகவின் சக்திகள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்துள்ளன. எடப்பாடி தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் ஒரு அணியும் என அதிமுக சிதறி கிடக்கின்றன.
 
மக்களவை தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறி அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டி வருகிறார்.
 
கூட்டணி தொடர்பாக  பாஜகவுடன் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ், பாரதிய ஜனதா கட்சியை முழுமையாக ஆதரிக்கிறேன் என கூறியுள்ளார். மேலும் பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு தந்துள்ளது என புகழாரம் சூட்டியுள்ளார்.

ALSO READ: டீ விற்றவரின் மகன் நாட்டின் பிரதமர்.! இனிமேல் வாரிசு அரசியலுக்கு இடமில்லை..! அமித்ஷா

நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் பிரிந்து கிடக்கும் அதிமுகவின் சக்திகள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி கிடைக்கும் எனவும் ஓ.பன்னீர்செல்வம்  கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments