Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈழப்போரின்போது எங்கே சென்றார் பச்சை தமிழன் ரஜினி: வேல்முருகன்

Webdunia
வெள்ளி, 19 மே 2017 (23:10 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து எந்த நேரத்தில் பேச  ஆரம்பித்தாரோ, அந்த நேரம் முதல் தமிழகத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தமிழக அரசியல் களத்தில் எளிதில் வெற்றி வாகை சூடிவிடலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்த சின்னசின்ன கட்சிகளுக்கு ரஜினியின் அறிவிப்பு பேரிடியாய் இறங்கியுள்ளது. எனவே அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



 


அந்த வகையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தனது ஆவேச கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

வேல்முருகன் கூறியதாவது: தமிழக அரசியல் குறித்தோ, மக்களின் வாழ்வாதார பிரச்னை குறித்தோ ரஜினிக்கு புரிதல் கிடையாது. இன்று பச்சைத்தமிழன் என்று சொல்லும் ரஜினி ஈழப்போரின்போது என்ன செய்தார்? நடிகர் ரஜினிகாந்த் அரியாசனத்துக்காக கனவு காண்கிறார், அது ஒரு நாளும் பலிக்காது. இன்றைய இளைஞர்கள் ரஜினியை அரசியல்வாதியாக ஏற்கும் நிலையில் இல்லை, அவர் திரை நட்சத்திரமாகவே தொடருவதே நல்லது. இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் பட்டப்பகலில் 20 வயது இளைஞர் மீது துப்பாக்கி சூடு.. ஆம் ஆத்மி கண்டனம்..!

பஹல்காம் தாக்குதல்.. 2 மாதங்களுக்கு பின் இருவரை கைது செய்த NIA.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

தவறான விமான டிக்கெட் வழங்கிய ஸ்பைஸ்ஜெட்.. நுகர்வோர் கோர்ட் அளித்த அதிரடி தீர்ப்பு..!

மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரம் பெங்களூரு.. தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ வைரல்..!

அமெரிக்க தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்.. பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments