டெல்லி அரசியலுக்கு செல்வீர்களா?...குஷ்புவை பேசவிடாத வானதி சீனிவாசன்!

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (16:25 IST)
பத்திரிக்கையாளர் சந்திப்பில் குஷ்புவை பேசவிடாமல் வானதி சீனிவாசனே பேசி பதிலளித்துள்ளார்.

அதிமுக கூட்டணி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் குஷ்பூ போட்டியிட திட்டமிடப்பட்டிருந்த சேப்பாக்கம் தொகுதி பாமகவுக்கும், கௌதமி போட்டியிட திட்டமிடப்பட்டிருந்த ராஜபாளையம் தொகுதி அதிமுகவுக்கும் சென்றுள்ளதால் இருவரும் படு ஏமாற்றமடைந்துள்ளனர். இதுவரை மூன்று கட்சிகளுக்கு மேல் தாவியும் குஷ்புவால் ஒரு சீட் கூட வாங்க முடியவில்லை என்று கேலிகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட குஷ்புவிடம் கேட்டபோது ‘நான் தேர்தலில் போட்டியிட பாஜகவுக்கு வரவில்லை. கட்சியை நம்பிதான் வந்தேன். இந்த முறை எங்கள் கூட்டணி வெற்றி பெறும்’ எனக் கூறியுள்ளார். அதன் பின்னர் டெல்லி அரசியலுக்கு செல்வீர்களா என்ற கேள்விக்கு குஷ்பு பதிலளிக்க முனைந்த போது குறுக்கிட்ட வானதி சீனிவாசன் ‘அதை கட்சி தலைமைதான் முடிவு செய்யும். யாருக்கு என்ன பொறுப்புக் கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும்’ எனக் கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரு லட்சத்திற்கும் கீழே வந்ததால் மகிழ்ச்சி..!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை: சென்னை வானிலை மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments