Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று அம்பேத்கருக்கு இன்னுமொரு பிறந்த நாள்: வைரமுத்து கவிதை

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (14:49 IST)
இன்று அம்பேத்கருக்கு இன்னுமொரு பிறந்த நாள் என கவியரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். 
 
முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று நரிக்குறவ இன குடும்பத்தினருடன் காலை உணவு சாப்பிட்டார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வரும் நிலையில் இந்த நிகழ்வு குறித்து கவிப்பேரரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் கவிதை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 
 
முதலமைச்சர் வந்தால்
கறிச்சோறு போடுவோம்
என்றார்கள்
 
கறிச்சோறு போட்டு
நாங்கள் வாக்குத் தவறாதவர்கள்
என்று மெய்ப்பித்துவிட்டார்கள்
நரிக்குறவர் இனத்து
நல்ல மக்கள்
 
அதைச் சாப்பிட்டு
நான் நாக்குத் தவறாதவன்
என்று மெய்ப்பித்துவிட்டார்
முதலமைச்சர்
 
அம்பேத்கருக்கு
இன்று
இன்னுமொரு பிறந்தநாள்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments