Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் பிடிக்காது, ஆனால் அப்பாவுக்காக வருகிறேன்: வைகோ மகன்

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (06:32 IST)
அரசியல் பிடிக்காது, ஆனால் அப்பாவுக்காக வருகிறேன்: வைகோ மகன்
அரசியல் பிடிக்காது ஆனால் அப்பாவுக்காக வருகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்பட பல கட்சிகளில் வாரிசு அரசியல் சர்வசாதாரண இருந்து வருகிறது என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது மதிமுகவில் வாரிசு அரசியல் வர தொடங்கிவிட்டது
 
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி தொழில் அதிபராக இருந்து வரும் நிலையில் தற்போது அவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற விரும்பியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது ’அப்பாவுக்கு வயதாகி விட்டதால் அவருக்கு ஆதரவாக அரசியலுக்கு வந்துள்ளேன் என்றும், பிடிக்காத அரசியலையும் சிறப்பாக செய்ய வேண்டும் என நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார் 
 
விரைவில் மதிமுக பொதுச் செயலாளராக துரை வையாபுரி பதவி ஏற்பார் என்றும் அவரது கட்டுப்பாட்டில் மதிமுக வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு இளைஞரின் கையில் மதிமுக வந்தால், அந்த கட்சி கட்சிக்கு முன்னேற்றம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments