Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதற்கும் தகுதியற்றவர் ஸ்டாலின்: வைகோ காட்டம்

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (17:12 IST)
தமிழக முதலமைச்சராக வேண்டும் என்று துடித்துக்கொண்டு இருக்கும் திமுக பொருளாளர் ஸ்டாலின் எதற்கும் தகுதியற்றவர் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.


 
 
தஞ்சாவூரில் மக்கள் நலக் கூட்டணியின் பொதுமக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "விவசாய நிலங்களை நாசமாக்கும் மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டதன் மூலம், காவிரி டெல்டா விவசாயிகளுக்கு செய்த துரோகத்திற்கு எந்த காலத்திலும் திமுகவிற்கு மன்னிப்பே கிடையாது.
 
தமிழக முதலமைச்சராக வேண்டும் என்ற கனவுடன் துடித்துக்கொண்டு இருக்கும் மு.க.ஸ்டாலின்  எதற்கும்  தகுதியற்றவர், மேலும், தமிழகத்தில் அனைத்து துறையிலும் ஊழல் செய்து, மக்களுக்கு துரோகம் செய்ததில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே குற்றவாளிகள்" என்று அவர் குற்றம்சாட்டினர்
 
மேலும், இந்த கூட்டத்தில் பேசிய  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் ஆட்சி செய்த தகுதியற்ற கட்சிகள், அந்த கட்சிகளை விரைவில் தமிழகத்தை விட்டு அகற்ற வேண்டும் என்று அவர் கூறினார்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

Show comments