Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராட்ட மேடையில் மயங்கி விழுந்தார் வைகோ! (வீடியோ இணைப்பு)

போராட்ட மேடையில் மயங்கி விழுந்தார் வைகோ! (வீடியோ இணைப்பு)

Webdunia
திங்கள், 10 ஜூலை 2017 (16:53 IST)
ஓஎன்ஜிசி நிறுவனம் கதிராமங்கலம் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என அந்த பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போராட்ட மேடையில் மயங்கி விழுந்தார்.


 
 
கதிராமங்கலம் பகுதி மக்கள் போராட்டம் நடத்திய போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க வைகோ, பழ நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் இன்று கதிராமங்கலத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
 
இந்த பேரணிக்கு பின்னர் கதிராமங்கலத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடை ஒன்றில் அனைத்து கட்சி தலைவர்களும் உரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உரை நிகழ்த்த சென்றபோது அவர் மைக் அருகே திடீரென மயங்கி விழுந்தார்.

 

நன்றி: News18 Tamilnadu
 
இதனையடுத்து திரண்டிருந்த பொதுமக்களும், மேடையில் இருந்த தலைவர்களும் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர் வைகோவை மேடையில் இருந்தவர்கள் ஆசுவாசப்படுத்தினர். சிறிது நேரத்திற்கு பின்னர் வைகோ இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் தனது பேச்சை ஆரம்பித்தார். வைகோ உணவு அருந்தாமல் இரண்டு கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்றதால் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

புனே கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தாத்தா தீவிரவாதியுடன் தொடர்புடையவரா? அதிர்ச்சி தகவல்..!

வங்க கடலில் ரெமல் புயல்! கனமழை மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments