Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் மாதிரி வேணாம், அண்ணா மாதிரி வாங்க’: வைகோவிடம் தொண்டர்கள் வலியுறுத்தல்

Webdunia
வெள்ளி, 8 மார்ச் 2019 (07:30 IST)
திமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதியை அதுவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பெற்று வந்துள்ள வைகோவிடம் அவரது தொண்டர்கள் அந்த ஒரு தொகுதியில் வைகோவே போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றார்களாம்
 
ஆனால் தனக்கு தேர்தல் அரசியலில் விருப்பம் இல்லை என்றும் பெரியார் போன்று தேர்தலில் போட்டியிடாமல் சேவை செய்ய வேண்டும் என்று விரும்புவதாகவும் சமீபத்தில் ஈரோட்டில் நடந்த மதிமுகவின் 27-ஆவது பொதுக்குழுக் கூட்டத்தில் வைகோ பேசினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் நீங்க பெரியார் மாதிரி வேணாம், அண்ணா மாதிரி வாங்க என்று கோஷமிட்டதாகவும், தொண்டர்களின் அன்புக்கட்டளையை ஏற்றுக்கொள்வதாகவும் வைகோ கூறியுள்ளார்.
 
எனவே திமுக கொடுத்த  அந்த ஒரு தொகுதியில் வைகோவே போட்டியிடுவார் என்றும், ஒருவேளை அதில் தோல்வி அடைந்தால் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவார் என்றும் மதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே பாராளுமன்றத்தில் வரும் ஐந்து ஆண்டுகள் வைகோவின் குரல் ஒலிக்க போவது உறுதி என மதிமுக வட்டாரங்கள் மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments