Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொன்னதும் துவங்கிய தமிழக அரசு - கர்ப்பிணிகளுக்கு இன்று முதல் தடுப்பூசி!

Webdunia
சனி, 3 ஜூலை 2021 (10:49 IST)
தமிழ்நாட்டில் இன்று முதல் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
இந்நிலையில் தடுப்பூசி போடும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அறிவிவித்துள்ளது. கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் முடிவு குறித்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி தமிழ்நாட்டில் இன்று முதல் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா மரணங்களை தமிழக அரசு மறைக்கவில்லை. கொரோனா இறப்பை குறைத்து காட்டுவதாக கூறப்படுவது தவறு என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

சாமிக்கு ஆரத்தி எடுப்பதில் பூசாரிகளுக்குள் சண்டை.. கத்திக்குத்தால் ஒருவர் கொலை..!

கோடையில் மின்வெட்டு வராது.. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிமொழி..!

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments