Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனு வாபஸ் பெற அவகாசம் முடிந்தது! – வெளியாகிறது வேட்பாளர் பட்டியல்!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (15:37 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு அளித்தவர்கள் வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிந்தது.

தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பிப்ரவரி 19ம் தேதியன்று ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 27ம் தேதி தொடங்கி 4ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 12,838 பதவிகளுக்கு, அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த வேட்புமனுக்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள்படி உள்ளதா என்பதை பரிசீலிக்கும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று மதியம் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அவகாசம் முடிவடைந்த நிலையில் மாலை வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments