வெளியானது யு.பி.எஸ்.சி தேர்வின் இறுதி முடிவுகள்: தமிழகத்தை சேர்ந்தவர் சாதனை..!

Webdunia
செவ்வாய், 23 மே 2023 (14:57 IST)
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியான நிலையில் அதில் தமிழகத்தை சேர்ந்த கோவில்பட்டி மாணவர் சாதனை செய்துள்ளதாக தகவல் வெளியாக உள்ளன 
 
2022 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ் இறுதி தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. யுபிஎஸ்சி தேர்வு எழுதியவர்கள் upsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 
யுபிஎஸ்சி இறுதி தேர்வில் முதல் நான்கு இடங்களை பெண்கள் பிடித்துள்ளதாகவும்  இஷிதா கிஷோர் முதலிடத்தையும்  கரிமா லோஹியா 2வது முதலிடத்தையும்  உமா ஹராதி 3-வது முதலிடத்தையும்  பிடித்தனர்.
 
யூபிஎஸ்சி தேர்வில் கோவில்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ண சாமி என்பவர் அகில இந்திய அளவில் 117 வது இடத்தை பிடித்து சாதனை செய்துள்ளார். அதேபோல்  புதுக்கோட்டையில் துணை ஆட்சியராக பணியாற்றி வரும் சரவணன், 147-வது இடம் பிடித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த மதிவதனி இராவணன் 447-வது இடம் பிடித்து யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
 
நாடு முழுவதும் யூபிஎஸ்சி இறுதி தேர்வில் 933 மூன்று பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் முதல் நான்கு இடங்களில் பெண்கள் தான் உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமே இருக்கு உங்களுக்கு!.. ஊழல் லிஸ்ட் என்கிட்ட இருக்கு!.. திமுகவை மிரட்டும் வேல்முருகன்!...

இந்திய அரசாங்கத்தில் 8931 நாள் பதவி வகித்த மோடி.. புதிய சாதனை..!

இந்தியாவை ஒருபோதும் மறக்க மாட்டோம்.. ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு..!

ஏப்ரல் 1 டிஜிட்டல் பணப்பரிமாற்றம் முற்றிலும் மாற்றம்.. இனி ஓடிபி மட்டும் இருந்தால் பணம் பெற முடியாது..!

ஈரானை பாகிஸ்தான் தாக்க வேண்டும்.. ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி சவுதி அரேபியா அழுத்தம்?

அடுத்த கட்டுரையில்
Show comments