வங்க கடலில் மீண்டும் புயல்? – வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2022 (09:42 IST)
சமீபத்தில் வங்க கடலில் உருவான புயல் கரையை கடந்த நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சமீபத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்து கரையை தொடர்ந்து. இந்நிலையில் இன்று முதல் 15ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியின் பல பகுதிகளின் பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிசம்பர் 13 முதல் 16ம் தேதிக்குள் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற பெரும்பாலும் வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Edited by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

தூத்துக்குடியில் கொடூரம்: அசாம் மாநிலப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கணவர் மீது தாக்குதல்!

அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு!.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர்!....

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: வழக்கை ஏற்க நீதிமன்றம் மறுப்பு!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் திறப்பு விழா.. மோடி, ஸ்டாலின் கலந்து கொள்கிறார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments