Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கலவரம் வெடிக்கும்: கொக்கரிக்கும் மத்திய அமைச்சர்!

தமிழகத்தில் கலவரம் வெடிக்கும்: கொக்கரிக்கும் மத்திய அமைச்சர்!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2017 (13:49 IST)
இந்து அமைப்பினர் மீது தாக்குதல் தொடர்ந்தால் தமிழகம் கலவர பூமியாகும் என பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
கன்னியக்குமரி மாவட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் இந்து அமைப்பினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடக்கிறது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் தொடர்ந்தால் தமிழகம் கலவர பூமியாக மாறி கலவரம் வெடிக்கும் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மீண்டும் தனது முந்தைய கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். ஒரு இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் கொல்லப்பட்டால், அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் போராட மாட்டார்களா?. எனவே தான் தமிழகத்தில் கலவரம் வர வாய்ப்பு உண்டு என எச்சரிக்கை தான் செய்தேன் என்றார்.
 
மேலும் ராமநாதபுரம், தேனி, கன்னியாகுமரியில் இந்து தலைவர்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. மேற்குவங்ம் மாநிலத்தின் சூழ்நிலை தமிழகத்தில் வர வேண்டும் என விரும்புகிறார்களா. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments