Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கம் தொகுதியில் தடுப்பூசி முகாம்: மக்களுக்கு நன்றி தெரிவித்த உதயநிதி

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (20:15 IST)
உதயநிதியின் சேப்பாக்கம் தொகுதியில் இன்று நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திய அனைவருக்கும் நன்றி என தனது டுவிட்டர் பக்கத்தில் உதயநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
தடுப்பூசியிடுவதே கொரோனா தடுப்பின் முக்கிய முன்னெடுப்பு என்பதை உணர்ந்து சேப்பாக்கம் பகுதி, 115 வது வட்டம், ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் அருகே ஜானி ஜான் சாலை பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். நன்றி
 
திருவல்லிக்கேணி, பீட்டர்ஸ் சாலை பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பொதுமக்களிடம் முகக்கவசம் அணியவேண்டும், அடிக்கடி கை கழுவ வேண்டும் என்ற  தொற்று தடுப்பு வழிமுறைகள் பற்றி  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
 
திருவல்லிக்கேணி, 115 அ வட்டம், ஷேக் தாவூத் தெரு பகுதியில் இன்றும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தடுப்பூசி செலுத்திக்கொண்டு, தொற்று பரவலை தடுக்க அரசு கூறியுள்ள வழிமுறைகளை பின்பற்றுவோம் என உறுதியளித்த பொது மக்களுக்கு நன்றி.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments