மக்களை வேட்டையாடும் பாஜக - அதிமுக: உதயநிதி காட்டம்!

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (16:39 IST)
சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
மத்திய அரசின் அறிவுறுத்தல்படி மாதம்தோறும் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த டிசம்பர் மாதத்திற்கு வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.660 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் கூடுதலா ரூ.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்நிலையில் இதனை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், 15 நாட்களில் ரூ.100 விலை உயர்ந்துள்ளது சிலிண்டர். இந்த நெருக்கடியான காலத்திலும் மக்களின் அடிப்படை தேவைகளை நசுக்கும் பாசிச போக்கை மத்திய அரசு கடைப்பிடிப்பதும், அடிமைகள் அதை வேடிக்கை பார்ப்பதும் வேதனை தருகிறது. மக்களின் வலிக்கு மருந்திடாமல் விலையேற்றம், விரோத சட்டம் என வேட்டையாடுவதை கண்டிக்கிறோம் என் பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments