Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஆயிரம் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் : அன்புமணி ராமதாஸ்

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2016 (07:50 IST)
கோவில்கள், கல்வி நிறுவங்கள், மக்கள் குடியிருப்பு பகுதிகள், நெடுஞ்சாலைகள் ஆகிய இடங்களில் செயல்படும் 2 ஆயிரம் டாஸ்மாக் மதுக்கடைகளை தமிழக அரசு மூட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

 
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
“தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் நோக்குடன் முதல்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. சர்ச்சைக்குரிய கடைகள், அதிக மது விற்பனையாகும் கடைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்களுக்கு அருகிலுள்ள கடைகள்தான் முதலில் மூடப்பட்டிருக்க வேண்டும்.
 
2015-இல் மது விற்பனை குறைந்தபோது நடைபெற்ற பகுப்பாய்வின்போது, கணக்கெடுக்கப்பட்ட மது விற்பனை குறைவாகக் காணப்பட்ட மதுக்கடைகளே இப்போது மூடப்பட்டுள்ளன. சென்னை நகரில் 600 மதுக்கடைகளில் 7 கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே அதிக அளவில் மது விற்பனையாகும் மாவட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் தருமபுரி மாவட்டத்தில் ஒரே ஒரு மதுக்கடை மட்டுமே மூடப்பட்டுள்ளது.
 
மதுவை ஒழிப்பதில் அரசுக்கு உண்மையான அக்கறை இருந்தால் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள், குடியிருப்புப் பகுதிகள், நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments