Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று அதிகாலை அடுத்தடுத்து சாலை விபத்துகள்: பொதுமக்கள் அதிர்ச்சி..!

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (10:35 IST)
சென்னையில் இன்று அதிகாலை 2 வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மெரினா காமராஜர் சாலையில் இன்று அதிகாலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு கார் கவிழ்ந்ததால், அதிலிருந்த இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் திருவான்மியூர் ஈசிஆர் சாலையில் அதிவேகமாக வந்த கார் மற்றும் லாரி மோதி தூய்மை பணியாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
சென்னையில் விபத்துக்களை கட்டுப்படுத்த புதிய வேக கட்டுப்பாட்டு விதிகள் நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில் அடுத்தடுத்து இரண்டு சாலை விபத்துக்கள் ஏற்பட்டு ஒரு உயிர் பலியாக உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments