கோயம்பேடு - ஆவடி, பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ: டெண்டர் வெளியீடு..!

Siva
புதன், 21 பிப்ரவரி 2024 (12:27 IST)
சென்னை கோயம்பேடு - ஆவடி, பூந்தமல்லி - பரந்தூர் ஆகிய பகுதிகளில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. 
 
சென்னையில் ஏற்கனவே இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை 16 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதையும், அதேபோல் பூந்தமல்லியில் இருந்து திருமழிசை வழியாக பரந்தூர் விமான நிலையம் வரை 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதையும் விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. 
 
இந்த மெட்ரோ பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான டெண்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த டெண்டரில் கலந்து கொள்ள பிப்ரவரி 28ஆம் தேதி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு!. 257 காலியிடங்கள்!...

நான் என்ன தப்பு பண்ணேன்.. ஏன் கைவிட்டீங்க!. புலம்பும் ஜெயக்குமார்.

ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.O இல்லை.. பூஜ்யம்தான்!. எடப்பாடி பழனிச்சாமி ராக்ஸ்!..

திருமணமான பெண்ணை மறுதிருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் உறவு கொண்டால் அது குற்றமல்ல: உச்சநீதிமன்றம்

25,000 ரூபாய் வரை இழப்பீடு தருகிறது இந்திய ரிசர்வ் வங்கி.. யார் யாருக்கு கிடைக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments