Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுக் கூட்டத்துக்கு வராத 2 அமைச்சர்கள் – அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு !

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (11:12 IST)
அதிமுக அலுவலகத்தில் தற்போது நடைபெற்று வரும் நிர்வாகிகள் கூட்டத்தில் இரண்டு முக்கியமான அமைச்சர்கள் கலந்து கொள்ளாதது சலசலப்புகளை உருவாக்கியுள்ளது.

அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற ராஜன் செல்லப்பா பற்ற வைத்த தீ அதிமுகவில் தற்போது கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் அதிமுகவுக்குள் எழுந்துள்ள சலசலப்புகளை தீர்க்க சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கும் இந்த கூட்டம் சற்று முன்னர் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகிய இரண்டுபேரும் பங்கேற்காததால் அதிமுக அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments