Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 வயது குழந்தையை குடிக்க வைத்த குடிகார்கள் கைது

2 வயது குழந்தையை குடிக்க வைத்த குடிகார்கள் கைது

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (15:52 IST)
சென்னை அம்பத்தூரில் இரண்டு வயது குழந்தைக்கு மது ஊட்டிய குற்றத்திற்காக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 
 
அம்பத்தூரைச் சேர்ந்த தனலெட்சுமியின் மகன் தானு. 2 வயதான அந்த சிறுவன் விளையாடச் சென்ற இடத்தில், மது குடித்துக்கொண்டிருந்த இரண்டு பேர் தானுவுக்கு மதுவை ஊட்டியுள்ளனர்.
 
பின்னர் வீட்டுக்குத் திரும்பிய சிறுவன் தானுவின் உடல்நிலை சரியில்லாததைக் கண்ட தனலெட்சுமி உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
 
தானுவை பரிசோதித்த மருத்துவர்கள் யாரோ சிறுவனுக்கு மது குடிக்க வைத்திருப்பதாக கூறினர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தனலெட்சுமி அம்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுவன் தானுவை மது குடிக்க வைத்த செல்வம், பழனி என்ற இருவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments