Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறையினர் எல்லாம் காந்தியின் பேரன்களா? டிடிவி தினகரன் கேள்வி!

Webdunia
வியாழன், 31 மே 2018 (16:41 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று ரஜினிகாந்த் அங்கு சென்று மக்களை சந்தித்து அதன் பின்னர் பேட்டி அளித்தது தற்போதைய விவாத பொருளாக மாறியுள்ளது. 

 
 
சமூக விரோதிகள்தான் கலவரத்திற்கு காரணம் என தமிழக அரசு மற்றும் ரஜினி கூறியதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஆர்கே நகர் எம்எல்ஏவுமான டிடிவி தினகரன் இதுகுறித்து பேசவுள்ளார். 
 
அப்போது அவர் கூறியதாவது, திமுக உறுப்பினர்கள் சட்டசபையை புறக்கணிக்காமல், சபைக்கு வர வேண்டும். எதிர்க்கட்சிகள் இல்லாமல் சட்டசபையை நடத்துவது முதல்வருக்கு அழகல்ல. 
 
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அரசு வெளியிட்டிருக்கும் அரசாணை பலவீனமானது. உடனடியாக இதனை எதிர்த்து தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
 
தூத்துக்குடியில் சமூக விரோதிகள் போராட்டத்தில் புகுந்ததாலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் எல்லாம் என்ன சமூக விரோதிகளா? இல்லை காவல்துறையினர் எல்லாம் காந்தியின் பேரன்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவு.! இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!!

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

அடுத்த கட்டுரையில்
Show comments