Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுயமரியாதை முக்கியம்.. இனிமேல் பாஜகவில் பயணிக்கும் எண்ணம் இல்லை: திருச்சி சூர்யா

Mahendran
வியாழன், 20 ஜூன் 2024 (10:59 IST)
தமிழக பாஜகவில் உள்ள அனைத்து பொறுப்புகளில் இருந்தும் திருச்சி சூர்யாநீக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இனிமேல் பாஜகவில் பயணிக்கும் எண்ணம் இல்லை என்று திருச்சி சூர்யா கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
அண்ணன் அண்ணாமலை அவர்களால்  ஈர்க்கப்பட்டுதான் நான் தமிழ்நாட்டு பாஜகவில் இணைந்தேன். என் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் தலைவனை பேசியதற்கு நான் பதில் அளித்தேன், அதற்காக என்மேல் நடவடிக்கை என்றால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்.
 
எந்த நிலையிலும் அண்ணன் அண்ணாமலை குடும்பத்தில் ஒருவனாகவே இருப்பேன்.  இனியும் தமிழ்நாடு பாஜகவில் பயணிக்கும் எண்ணம்  எனக்கு இல்லை. சுயமரியாதை முக்கியம். எதன் பொருட்டும் அதை கைவிட முடியாது. என் மீது அன்பு கொண்டு எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments