திருநங்கைகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் சென்னையில் நடைபெற்றது.
சென்னையில் திருநங்கைகளுக்கான வேலை வாய்ப்பு முகாமை, காவல்துறையினர் மற்றும் பாரதி பவுண்டேஷன் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில், நூற்றுக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில், அவர்களின் அடிப்படை தகவல்கள் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட தகவல்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு, அவர்கள் வேலை வாய்ப்பு பெற ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியை பல்வேறு தரப்பினரும் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.