Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாக்டருக்கு படித்துவிட்டு சாலையில் பிச்சை எடுத்த திருநங்கை – கிளினிக் அமைத்துக் கொடுத்த காவலர்!

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (15:41 IST)
எம்பிபிஎஸ் படித்துவிட்டு அந்த தொழிலை தொடர முடியாமல் பிச்சை எடுத்து வந்த திருநங்கைக்கு போலிஸார் கிளினிக் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

மதுரையில் திலகர் திடல் காவல் நிலைய சரகத்தில் போலிஸார் ரோந்து சென்ற போது அங்கு தனியாக நின்று கொண்டிருந்த திருநங்கையை பார்த்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் தான் மருத்துவப் படிப்பை முடித்துள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால் அதை காவலர்கள் நம்பவில்லை. இதையடுத்து அவரை காவல் ஆய்வாளர் கவிதா விடம் அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவர் தன் தோழியின் மூலமாக தனது சான்றிதழ்களை கொண்டு வந்து காட்டியுள்ளார். இதையடுத்து தான் மருத்துவப் படிப்பை முடித்திருந்தாலும் சமூகத்தில் திருநங்கைகளுக்கு அங்கிகாரம் இல்லாததால் அந்த தொழிலை தொடர முடியாமல் இப்படி பிச்சை எடுப்பதாக சொல்லியுள்ளார். இதையடுத்து அவருக்கு காவல் ஆய்வாளர் கவிதா  உயரதிகாரிகளின் உதவியுடன் கிளினிக் அமைத்துக்கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments