Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று தை அமாவாசை.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்..!

Siva
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (08:49 IST)
இன்று அதாவது பிப்ரவரி 9ஆம்  தை அமாவாசை தினம் என்பதால் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பக்தர்கள் புனித நீர்நிலைகளில் குவிந்திருக்கிறார்கள். 
 
தை அமாவாசை தினத்தில் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து, அவர்களின் ஆசியை பெறுவதற்காக பக்தர்கள் வழிபடுகிறார்கள்.  தை அமாவாசை தினம் மிகவும் புண்ணிய தினமாக கருதப்படும் நிலையில் இந்த தினத்தில் பக்தர்கள் கங்கை, யமுனை, காவிரி போன்ற புனித நதிகளில் நீராடி தர்ப்பணம் செய்கிறார்கள்.
 
அதேபோல் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி போன்ற தலங்களிலும் பக்தர்கள் தர்ப்பணம் செய்து வருகிறார்கள். பல கோயில்களில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
 
ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற ராமநாதசுவாமி மற்றும் அம்பாள் திருச்சிலைகள் தை அமாவாசை தினத்தன்று அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறுகிறது.
 
 திருச்செந்தூர் முருகன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.  கன்னியாகுமரியில் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் தர்ப்பணம் செய்கிறார்கள்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments